நான்கு வருடமும்

நானும், தனிமையும்

நீயின்றி ஒருஅசைவும்

உன்நிழலின்றி என்மனதும்

செயல்இழந்துதானேபோகும்

உயிர்இருந்தும் வெறும்

உடல்மட்டும்தானே வாழும்

.

சேர்ந்து வாழந்தானே

பிரிந்தும் வருந்துகிறோம்

இருந்தும் என்னபயன்

இமைக்கூட உன்னை பார்க்கமுடியவில்லை

.

எந்நேரமும் நீ துணையாய் வேண்டுமென்றா கேட்கிறேன்

என்நிழல் நெருங்காவிட்டாலும் பரவாயில்லை, என்விழி

ஓரமாவது வந்துபோகலாமே..!

.

சட்டென்று பெரும்மழையாய் வந்து

சாரல்வரை மெல்லபோகாது

துளிகள் இன்றி உடனே, திரும்பிபோனால்

மழைக்கு என்ன மரியாதை

.

என்னதெரியும் உனக்கு என்காதல் பற்றி

அழுவது தெரியுமா.? அழுதும் கண்ணீர்

துடைப்பது தெரியுமா.? நீயும் வெறும்

உடல்தான் நான்அறிவேன் இருந்தும் என்னசெய்ய..!

.

விரல்கோர்க்கதான், விழிபார்க்கத்தான்

விதிமுடியும்வரை நெஞ்சம்நீயாகதான்   

.

தூரத்து பறவையாய்

தினம்தினம் நின்று

உன்னை ரசித்துவிட்டு போகணும்

ரசனையே இல்லாது இன்று

தனிமரமாய் இருக்கிறேன்

.

நீர்இன்றி, நீயுமின்றி

மரமும், மனமும்

எப்படி வாழும், நீர்இல்லாமல்

நீயும் இல்லாமல் அது

எப்படி அழகாகிடும்

.

சுற்றிஇருளில் வட்டநிலா நீ

உனக்கு பொட்டுவைக்கத்தானே

உன்னைகாண போராட்டமே

.

எதைக்கொண்டு வெள்ளம் நீ தடுப்பாய்

அனைகொண்டு மட்டும் காட்டாராய்

கரைதடுத்தாய்  

.

உடைத்தெரியும் எல்லாம்

உனைக்கான என்மனம்

விரைந்து வரும்

உன்அழுகை செவிக்குள் புகுந்து

என்னைசிதைக்கும் என்பதால்

வரும்கோபமும் வாசலோடு திரும்பிபோகிடும்

.

என்இன்பத்தில் நீ இருந்தாய் என்றோ

நான் மறந்திருப்பேன், என்இன்பமே

நீயானதால் என்னநான் செய்வேன்

.

கடலேறி போகும் நான்

கரைவந்து சேரமாட்டேனா

கடல்தாண்டி நீயிருக்க

கரிசல்காட்ட காதல்செய்யமாட்டாயா..?

.

இழந்துபோக எனக்குஉன்னை தவிரஎன்னஇருக்கு

நான்இறந்துபோனாலும் நீ அழுவாய் என்றே

எல்லாமுடிவும் மூடி வைத்துள்ளேன்   

15.

உன்மடிசாய என்னஎல்லாம் போராட்டம்

அந்தகணமே என்உயிர்போனாலும் போகட்டும்

.

வாழத்தானே என்று நீ சொல்லலாம்

வாழும்போதுஇது எல்லாம் நடக்கணுமா

.   

ஆசையால் உனக்கு மல்லி பூ வாங்கிதரனும்

அரைமுழம் என்றாலும் அதுஎன்உழைப்பாய் இருக்கவேணும்  

.

சேர்ந்துநாம் வாழமுடியாதா

தனித்து இருந்தாலும் காதல்வாழாதா.?

இரவுமுடிந்தும் நிலாமறுநாள் வராதா.?

செய்யாத தவறுக்கு கடவுளிடம்

மன்னிப்பும் கிடையாதா..?

.

தூரப்பார்வையால் ஒருநிமிடம் என்னைப்பார்

தூதும் என்னவென்றால் தொடும்தூரம் நீயிரு

அணைத்துகொள் ஆறுதல்கொடு

இதழோர புன்னகை நான்பார்க்கணும்

அதுமட்டும்தானே உன்னிடம் நான்கேட்கும் வரம்

.

காத்திரு காதலே நான் வருவேன்

உனக்காக உயிரும் தருவேன்

என்ஆசை நீயின்றி வேறேது

என்முன் நீ இருக்க புதிதாய்

வேறேதும் ஆசைஇருக்கு

அன்பே வா அழுதாலும் அரவணைத்துக்கொள்

காலமும் காதலோடு இரு, காத்திரு எந்நாளும்

காதலி நீ கண்ணீர்விடாதே..!

கவிதை காதலன்